மறுமணம் செய்து கொண்டாரா நடிகை காஜல் பசுபதி
மறுமணம் செய்து கொண்டாரா நடிகை காஜல் பசுபதி


[புதியவன்] 

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து பின் நடிகையாக மாறியவர் காஜல் பசுபதி. சன் மியூசிக்கில் தொகுப்பாளாராக இருந்து பின்னர் சின்னத்திரை பக்கம் திரும்பிய இவர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது படங்கள் எதிலும் நடிக்கவில்லை என்றாலும் சமூக வலைதளங்களில் ஈடுபாட்டுடன்  செயல்பட்டு வருகிறார்.

கமலின் 'வசூல் ராஜா எம்பிபிஎஸ்' படத்தில் நடித்ததன் மூலமாக கோலிவுட் திரையுலகில் நடிகையாக அறிமுகம் ஆனார் காஜல் பசுபதி. அதனை தொடர்ந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். அந்த வகையில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியான 'கோ' படத்தில் நக்சலைட்டாக நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார்.

இதனிடையில் சின்னத்திரையில் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. கமல் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தார் காஜல் பசுபதி. கிட்டத்தட்ட 70 நாட்களை கடந்தும் பிக்பாஸ் வீட்டுக்குள் தாக்கு பிடித்து இருந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட் ஆனார். இந்நிலையில் காஜல் பசுபதி டான்ஸ் மாஸ்டர் சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2008 ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை இருவரும் ஒன்றாக வாழ்ந்த இவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.

அதனை தொடர்ந்து காஜல் பசுபதி சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். அதே நேரத்தில் சில்வியா என்பவரை மறுமணம் செய்து கொண்டார் சாண்டி. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் காஜல் பசுபதி திடீரென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்தார். அத்துடன், 'ஒரு வழியாக எனக்கு மறுமணம் முடிந்து விட்டது. திடீரென நடந்த காரணத்தால் யாருக்கும் கூற இயலவில்லை. எல்லாரும் சந்தோஷப்படுவீங்கன்னு நம்புகிறேன்' என பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து அவரின் பதிவுக்கு கீழ் ஏராளமான கமெண்ட்கள் குவிந்தன. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் காஜல் பசுபதியிடம் மறுமணம் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், அது வெறும் பிராங் தான். இதுக்கு முன்னாடியும் இதே மாதிரி ஒரு பதிவு போட்டுள்ளேன். இது படப்பிடிப்புத் தளத்தில் எடுத்த புகைப்படம்.

எனக்கு மறுமணம் செய்து கொள்வதில் எல்லாம் விருப்பமில்லை. அதுக்கே வாய்ப்பும் இல்லவே இல்லை. யாரையாவது பிடிச்சு இருந்தால் கூட லீவிங் ரிலேஷன்ஷிப் மட்டும் தான். கல்யாணம் கிடையவே கிடையாது என உறுதியாக தெரிவித்துள்ளார். இதனால் காஜல் பசுபதி மறுமணம் செய்துக்கொள்ள வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகியுள்ளது. [எ]

117 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.