யோகி.
இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்மன் முன்றலில் நேற்று புதன்கிழமை(17) இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன தலைவர் வி. நடராசா தலைமையில் மாபெரும் தைப்பொங்கல் விழா மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
இரணைமடுக் குளத்தின் 104ம் ஆண்டை முன்னிட்டு கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் 104 பானைகள் வைத்து கலை பண்பாட்டு நிகழ்வானது இடம்பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க செயலர் எஸ். முரளிதரன் கலந்து கொண்டார்.
குறித்த பொங்கல் நிகழ்வில் சம்பிரதாயபூர்வமாக புதிர் எடுத்து வரப்பட்டதைத் தொடர்ந்து பூசை வழிபாடுகள் நடைபெற்றன.
பிரதான பொங்கல் பானை ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து 104 பானைகளில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றதைத் தொடர்ந்து பாரம்பரிய கலை மற்றும் கலாசார விளையாட்டுக்களும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் துறை சார்ந்த பணிமனை அதிகாரிகள்இ நிறுவனத்தினர்இ விவசாயிகள்இ பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.