நடிகர் விஜயகாந்த் சமாதியில் ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்த் கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்தார்.
உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், விஜயகாந்த் உயிரிழந்து அடைந்து இன்றுடன் 1 மாதம் பூர்த்தியாகின்றது.
இதற்கமைய நேற்று முன்தினம் விஜயகாந்த் சமாதி யில் அதிகமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 50 ஆயிரம் பேர் விஜயகாந்த் சமாதியில் அஞ்சலி செலுத்தியிருந்தனர் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், அஞ்சலி செலுத்த வருபவர்கள் பசியோடு செல்லக்கூடாது என்பதற்காக தினமும் அன்னதானம் வழங்கப் பட்டுவருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.