செல்வன்.
முல்லைத்தீவு மாத்தளன் கடற்கரையில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
குறித்த நபர் உறவினர்களுடன் மாத்தளன் பிரதேசத்தில் உள்ள கடற்கரையில் நேற்று ஞாயிற்றுகிழமை(28) நீராடச் சென்ற போதே காணாமல் போயுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
புதுக்குடியிருப்பு 10ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இராசதுரை கஸ்தூரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினர், காவல்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போனவரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.