முல்லை தனிநபரினால்  கடற்கரை பிரதேசம் ஆக்கிரமிப்பு;
முல்லை தனிநபரினால்  கடற்கரை பிரதேசம் ஆக்கிரமிப்பு;

 மீனவர்களின் தொழில் பாதிப்பு!

(செல்வன்)

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட  சிலாவத்தை தியோநகர் கடற்கரைப்பகுதியில் கடற்தொழிலாளர்கள் கரையில் தொழில் செய்ய முடியாதவாறு அங்கு பாரிய நிறுவனம் ஒன்றை அமைத்துள்ள தனியார் ஒருவர் கடற்கரை பகுதி தனக்கு சொந்தமான பகுதியும் கடலுக்குள்ளும் தனக்கு என உரிமை கோரி வருவதனால் மீனவர்களின் தொழில் நடவடிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள சிலாவத்தை தெற்கு பகுதியில் உள்ள தியோநகர் என்ற கடற்கரையில் 2.5 கிலோமீற்றர் தூரத்தினை தனியார் நிறுவனம் ஒன்று கைப்பற்றியுள்ளதால் சிலாவத்தை தெற்கு தியோநகர் மீன்பிடி சங்கத்தின் மீன்பிடி நடவடிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

1990ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட சங்கமாக சிலாவத்தை தெற்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் 16 ஆவது இறங்கு துறையாக சிலாவத்தை தெற்கு தியோநகர் இறங்குதுறை காணப்படுகின்றது.

இந்த நிலையில் தியோநகர் கடற்கரையினையும் தனியார் சொந்தம் கொண்டாடி வருகின்றார்கள் இலங்கையில் கடற்தொழிலினை நம்பி வாழும் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் இந்த மக்கள் கடற்கரையில் தங்கள் தொழில்களை செய்துவருகின்றார்கள்

ஆனால் முல்லைத்தீவு தியோநகர் கடற்கரையில் மீனவர்கள் ஒரு சிறு கொட்டில் கூட போட முடியாத நிலை இதற்கு காரணம் குறித்த பகுதியில் 100 ஏக்கருக்கு மேலான நிலப்பரப்பில் ஆழுகை செய்து வரும் கனடா நாட்டினை சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான நிறுவனம் அங்கு இருக்கின்றார்கள் அவர்கள் தற்போது கடலுக்குள்ளும் தங்களுக்கு சொந்தமான நிலம் காணப்படுவதாக தெரிவித்து கடற்கரையில் மீனவர்கள் தொழிலுக்காக செய்யும் எந்த நடவடிக்கையினையும் செய்யவிடாமல் தடைசெய்துவருகின்றார்கள் 

இது குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகின்றது.இந்த பிரச்சினை காவல் நிலையம் வரை சென்று பின்னர் மாவட்ட அரச பணிமனை அதிகாரிகள் வரை சென்று இதுவரை தீர்க்கப்படாத நிலையில் கடற்தொழிலாளர்கள் இணைந்து மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளார்கள்.

இலங்கை நாட்டில் உள்ள கடற்கரையில் இலங்கை பிரஜை தொழில் செய்யமுடியாத நிலை காணப்படுவதை சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
கடற்கரை கடலோர பாதுகாப்பு பிரிவிற்கு சொந்தமானது கடற்கரையினை யாரும் சொந்தம் கொள்ள முடியாது என சொல்கின்றார்கள் ஆனால் முல்லைத்தீவில் உள்ள அதிகாரிகள் சொல்கின்றார்கள் அவர்களுக்கு கடல்வரைக்கும் காணி இருக்கென்று சொல்லுகின்றார்கள்

இந்த நிலையில் நேற்று(03) முல்லைத்தீவு கடலில் இறால் பிடி சீசன் காணப்படுவதால் வலையில் பட்ட இறால்களை வெய்யிலுக்கு மத்தியில் இருந்து தெரிந்து எடுக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் வெய்யிலுக்காக ஒரு தறப்பாளினை கூட கட்டமுடியாது அங்கு தடியினை நாட்டி தறப்பாளினை கட்டியபோது அதனையும் அகற்ற சொல்லி நிக்கின்றார்கள் குறித்த நிறுவனத்தினர்.

150 வரையான மீனவர்களை கொண்ட தியோநகர் மீன்பிடி சங்கத்தின் தற்போது 20 வரையான படகுகளை வைத்து கடற்தொழில் செய்துவருகின்றார்கள் இவர்களை நம்பி பல குடும்பங்கள் மீன் தெரிந்து தங்கள் வாழ்வாதரத்தினை கொண்டு செல்கின்றார்கள் 2.5 கிலோமீற்றர் துரும் கொண்ட கடற்கரையில் வீச்சுவலை செய்யமுடியாது,தூண்டில் போட்டு மீன் பிடிக்க முடியாது,ஏரல் கிண்ட முடியாது ஒரு கொட்டில் போடமுடியாது இவ்வாறு மீனவர்களுக்கும் இந்த நிறுவுனத்திற்கும் இடையில் இந்த நிலையில் தீர்க்கப்படாத பிரச்சினையாக தொடர்ந்து கொண்டு செல்கின்றது.

இந்த விடயத்தில் கடற்தொழில் நீரியல்வள பணிமனை அதன் அமைச்சு மற்றும் மாவட்டத்தில் உள்ள அரச பணிமனை அதிகாரிகள் உடடியாக தலையீட்டு மீனவர்களின் தொழில் வாழ்வாதார பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என மீண்டும் கடற்தொழிலார்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் மூவரின் குரல்பதிவுகள் மற்றும் சம்பவ இடத்தின் வீடியோக்கள் என்பன உள்ளன.(ப)
 
 

#uthayannews #newsupdate #todaybreaking #newsupdate #breaking

141 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.