குடிவரவு, குடியகல்வு பணிமனை பிரதிக் கட்டுப்பாட்டாளர் தெரிவிப்பு!
(ஆதவன்)
இடம்பெயர்ந்து இந்தியாவுக்குச் சென்று முகாம்களில் தங்கியிருப்பவர்கள், மீண்டும் இலங்கைக்குத் திரும்ப வேண்டும் என்று இலங்கை குடிவரவு, குடியகல்வு பணிமனையின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் ஈ.எச். நயனா பிரசங்க தெரிவித்துள்ளார் .
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
நிரந்தரமாக இந்த நாட்டு பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அதன் வரப்பிர சாதங்களை அனுபவித்தல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. பிரஜாவுரிமை பெறுவதற்கான சத்தியப் பிரமாணம் செய்த பின்னர் அமைச்சர் மற்றும் அமைச்சரின் செயலாளர் ஆகிய இருவரும் பத்திரத்தில் கையொப்பம் இட வேண்டும். அதற் கான பத்திரத்தில் கையொப்பம் வைத்த பின் சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக வந்து கொழும்பில் பெற வேண்டும்.
இது தபாலில் அனுப்பப்பட மாட்டாது. ஆனால், உங்களுக்காக மீண்டும் பத்திரத்தை வவுனியாவில் வைத்து விரைவாக வழங்கத் தீர்மானித்துள்ளோம். உங்களது சிரமத்தையும், அதிக பணச்செலவு ஏற்படுவதைத் தடுக்கவும் இந்தத் திட்டத்தை நாம் செய்கின்றோம்.
குறித்த பிரஜாவுரிமை சான்றிதழ் வாழ் நாளில் ஒரு தடவை மாத்திரமே வழங்கப்படும். மூலப் பிரதிகளை எங்கும் கொடுக்காமல் அதன் பிரதிகளை வழங்கி உங்கள் செயற்பாடுகளை நீங்கள் முன்னெடுக்க முடியும். நான் வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றேன்.
போர் காரணமாக இடம் பெயர்ந்து இந்தியாவில் முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியிலும் இருப்பவர்கள் இங்கு வரவேண்டும். அவர்களும் இவ்வாறு பிரஜாவுரிமையைப் பெறமுடியும். நாட்டைவிட்டு தற்போது எவ்வளவு பேர் வெளியேறினாலும் நாங்கள் உங்களை வரவேற்கின்றோம். ஒருநாடு, ஒரு மக்களாக இருந்து இந்த நாட்டை முன்னேற்றுவோம் - என்றார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.