(ஆதவன்)
முல்லைத்தீவு நகரத்தைப் பசுமையான நகரமாக மாற்றுவதற்கான திட்டத்தின் அடிப்படையில் தற்போது 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டுள்ளன என்று முல்லைத்தீவு மேலதிக மாவட்டச் செயலாளர் சி.குணபாலன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் முல்லைத்தீவில் ஏற்பட்ட போராலும், ஆழிப்பேரலையாலும் பெருமளவு மரங்கள் அழிவடைந்துள்ளன. இதனால் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் மற்றும் கரைதுறைபற்று பிரதேச செயலகக் கூட்டங்களில் முல்லைத்தீவில் மரம் நடுவதன் முக்கியத்துவம் தொடர்பான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போது 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டுள்ளன - என்றார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.