அவதியுறும் மக்கள்!
செல்வன்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்துக்கான இலவச நோயாளர் காவுவண்டிச் சேவை(1990) கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அதனை அண்டியுள்ள மக்கள் பெரும் துன்பங்கங்களை சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக மாங்குளம் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படும் குறித்த அவசர நோயாளர் காவு வண்டியானது பிரதானமாக ஏ9 வீதியில் இடம்பெறும் விபத்துக்களின் போதும் போக்குவரத்து சிரமங்களை எதிர்நோக்கும் பாண்டியகுளம், நட்டாங்கண்டல் மல்லாவி,கோட்டை கட்டிய குளம், அம்பலபெருமாள், அம்பகாமம், தட்சடம்பன் மற்றும் ஒலுமடு உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களுக்கும் இந்துபுரம், வசந்தபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கும் நாளாந்தம் இந்த சேவையை பெற்று வரும் நிலையில் தற்போது மூன்று மாதங்களாக இந்த நோயாளர் காவுவண்டிச் சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் பல்வேறு துன்பங்களுக்குள் தள்ளப்பட்டுள்னர்.
குறிப்பாக நட்டாங்கண்டல் போன்ற பகுதிகளில் இருந்து நோயாளர்கள் சுமார் 3000 ரூபா வரையில் முச்சக்கரவண்டிக்கு செலவழிக்க வேண்டியநிலையில் குறித்த சேவையை மீண்டும் மிக விரைவாக இயக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.