(ஆதவன்)
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் வெடியில் சிக்கி காயமடைந்த குடும்பத் தலைவரை, அவரது வளர்ப்பு நாயே இனங்காட்டி மீட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
காட்டுக்குள் காயமடைந்த நிலையில் உள்ள குடும்பத் தலைவரைப் பார்த்த நாய், அவரது குடும்பத்தினரிடம் வந்து தனது எஜமான் காயமடைந்திருப்பதை சைகைகளால் வெளிப்படுத்தியுள்ளது. இதையடுத்தே குடும்பத்தினர் அங்கு சென்று காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
காயமடைந்த குடும்பத் தலைவரான பழனி வடிவேல் (வயது - 66) காயத்தின் தீவிரத் தன்மை காரணமாக பின்னர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.