[புதியவன்]
நடிகை ராஷ்மிகா மந்தனா கடைசியாக நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அனிமலின் வெற்றிக்குப் பிறகு அவர் அதிகரித்த சம்பளத்தைப் பற்றிய வதந்திகளை மறுத்துள்ளார்.
இந்த திரைப்படத்தினை அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். படத்தில் பாபி தேவுல், திரிபாதி டிம்ரி, பரினீதி சோப்ரா, அனில் கபூர், சவுரப் சுக்லா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா எவ்வளவு கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, இந்த படத்தில் நடிக்க சம்பளமாக 5 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறாராம். வழக்கமாக ஒரு படத்தில் நடிக்க 3 கோடி வரை சம்பளம் வாங்கி வந்த ராஷ்மிகா தற்போது இந்த அனிமல் படத்தில் நடித்ததற்காக சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாராம்.
அந்த வகையில், ஒரு படத்துக்கு நடிகை ரஷ்மிகா 4 கோடி சம்பளம் வாங்குவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “இதையெல்லாம் பார்த்த பிறகுதான் சம்பளத்தை உயர்த்தி கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. தயாரிப்பாளர்கள் யாராவது என்னிடம் கேள்வி கேட்டால், மீடியாக்களில் அப்படித்தான் சொல்கிறார்கள். நான் அவர்களின் வார்த்தைகளின்படிதானே வாழ வேண்டும்” என்று பதிலளித்துள்ளார். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.