(ஆதவன்)
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலர் தொடர்பான கலந்துரையாடலில் இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலர் சர்ச்சைக்கு தீர்வு காண்பதற்காக வவுனியாவில் கலந்துரையாடல் ஒன்று நேற்று நடந்தது.
கட்சியின் புதிய தலைவர் சி.சிறீதரன், பதில் பொதுச்செயலர் பா.சத்தியலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருடன், செயலர் பதவிக்கு போட்டியிட்ட இரண்டு தரப்பும் கலந்து கொண்டன.
திருகோணமலையைச் சேர்ந்த ச.குகதாசனும், மட்டக்களப்பைச் சேர்ந்த ஞா.சிறிநேசனும் செயலர் பதவியை ஒவ்வொரு வருடமாக பகிர்ந்து கொள்ள இணங்கினாலும், யார் முதலாவது வருடத்தில் செயலாளராகப் பதவி வகிப்பது என்பதில் இணக்கப்பாடு ஏற்படவில்லை. இருவரையும் பேசி ஒரு முடிவுக்கு வருமாறு கேட்கப்பட்டிருந்தது. இருவரும் பேசி எடுக்கும் முடிவுக்கு தான் இணங்குவதாக கட்சித் தலைவர் சிறீதரன் குறிப்பிட்டார். இருவரும் தாம் ஏன் பொதுச்செயலாளராகப் பதவி வகிக்க வேண்டும் என்ற நியாயத்தை குறிப்பிட்டனர்.
எனினும், இணக்கப்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, மேலும் 2 நாள்கள் எடுத்து தீவிரமாக யோசிக்கும் படியும், மீண்டும் கூடிப் பேசுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.