நாட்டுக்கு வருகைத்தரும் சுற்றுலாவிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, இந்த மாதத்தின் கடந்த 8 நாட்களில் மாத்திரம் 60 ,122 சுற்றுலாவிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர். அத்துடன், கடந்த மாதத்தில் 2 இலட்சத்து 82 ஆயிரத்து 53 சுற்றுலாவிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ரஸ்யாவில் இருந்தே அதிகளவிலான சுற்றுலாவிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர். ரஸ்யாவில் இருந்து 8,755 சுற்றுலாவிகளும், இந்தியாவில் இருந்து 8,369 சுற்றுலாவிகளும், ஜேர்மனியில் இருந்து 4,423 சுற்றுலாவிகளும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.