ஆதவன்.
மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்து வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் நேற்றுத்திங்கட்கிழமை(11) மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
பாடசாலையில் இருந்த குப்பைக் குழியைத் துப்புரவு செய்த போது அதற்குள் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட் டது. பாடசாலை நிர்வாகத்தால் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், சிறப்பு அதிரடிப் படையினரின் உதவியுடன் அங்கிருந்து 7 மோட்டார் குண்டுகளை மீட்டிள்ளனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.