புதியவன்
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய தலைமை பூசகரான தம்பிராசா மதிமுகராசா, சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று பொலிஸாரின் அராஜகத்தால் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கடந்த 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த எட்டுப் பேரையும் விடுதலை செய்து வவுனியா நீதிமன்று கடந்த செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
விடுதலையான பூசகர் சுகவீனமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 5 நாட்கள் சிறைச்சாலையில் அவர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.