புதியவன்
நடிகை சமந்தா தசை அழற்சி என்ற அரியவகை நோய்ப் பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறார். இந்தப் பாதிப்பு காரணமாக சினிமாவிலிருந்து ஓய்வெடுத்திருந்த அவர், இப்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். அவர் நடித்துள்ள சிட்டாடல் இணைய (வெப்) தொடர் வெளியாகி வருகிறது.
இதற்கிடையே, உடல் ஆரோக்கியம் குறித்து, பாட்காஸ்டில் தன் நண்பருடன் அவர் பேசி வருகிறார். அதில் தசை அழற்சி காரணமாக சிட்டாடல் படப்பிடிப்பில் தான் மயங்கி விழுந்ததாக சமந்தா குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி சமந்தா தெரிவித்ததாவது: ''தசை அழற்சி நோய் காரணமாகப் படப்பிடிப்பு கடினமாக இருந்தது.
குஷி படப்பிடிப்பை முடித்துவிட்டு, சிட்டாடல் இணையத் தொடரில் நடிக்க வேண்டியிருந்தது. சண்டைக்காட்சிகள் அதிகம் என்பதால் உடல் ரீதியாக மிகவும் கடினமாக இருந்தது. கடும் வலியால் அவதிப்பட்டேன். ஒரு கட்டத்தில் படப்பிடிப்பில் மயங்கி விழுந்தேன்'' - என்றார் சமந்தா.
அரியவகை நோயால் அவதிப்படும் நடிகை சமந்தா விரைவில் குணமடைய வேண்டும் என அவரது இரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். (க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.