காணிகளை விடுவிப்பு தொடர்பில் முடிவில்லை- மாவட்ட செயலாளர் தெரிவிப்பு!
காணிகளை விடுவிப்பு தொடர்பில் முடிவில்லை- மாவட்ட செயலாளர் தெரிவிப்பு!

(செல்வன்)
தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் உறுதியான முடிவு கிடைக்கவில்லை என மாவட்ட செயலாளர் தெரிவித்ததாக கேப்பாபுலவு  மக்கள் தெரிவிப்பு 

தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் இதுவரை தனக்கு உறுதியான முடிவு கிடைக்கவில்லை என முல்லைத்தீவு மாவட்ட செயலர் தெரிவித்ததாக கேப்பாபுலவு  மக்கள் தெரிவித்தனர் 
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி அரசதலைவருக்கும் முல்லைத்தீவு மாவட்ட செயலளருக்கும் கடந்த 11.03.2024 அன்று மாவட்ட செயலரிடம் மனு ஒன்றினை கையளித்துள்ளனர்.

இதன்போது குறித்த கடிதத்தை தான் உரிய தரப்புக்களுக்கு அனுப்பி  பத்து நாட்களில் ஒரு பதிலை பெற்று வழங்குவதாக தெரிவித்தார்

இந்நிலையில் நேற்று (25.03.2024) கேப்பாபுலவு மக்கள் மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட செயலளரை சந்தித்து கலந்துரையாடினர் இதன்போது தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் உறுதியான முடிவு இதுவரை கிடைக்கவில்லை என மாவட்ட செயலாளர் தெரிவித்ததாக கேப்பாபுலவு  மக்கள் தெரிவித்தனர்.


இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மக்கள் பல வருடகாலமாக தாம் தமது காணிகளை இழந்து சிரமங்களுக்கு மத்தியில் வாழ்வதாகவும் பல போராட்டங்கள் செய்தும் இதுவரை தீர்வு இல்லை என்றும் தமது காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவறினால் மீண்டும் தொடர் போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

கேப்பாப்புலவு மக்களின் ஒருபகுதியினரின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் பாடசாலை, ஆரம்ப சுகாதார நிலையம் ,ஆலயங்கள் , தேவாலயம்,பொதுநோக்கு மண்டபம்  உள்ளிட்ட   மக்களின் குடியிருப்புக்கள் இன்றும்  இராணுவ கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றன

குறிப்பாக  மக்களின் பயன்தரு தென்னை மரங்கள் பல குறித்த காணியிலேயே காணப்படுகின்றன குறிப்பாக 62 பெயரின் 171 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாது இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்
குறிப்பாக நேற்றைய தினம் மக்கள் மாவட்ட செயலளரை சந்தித்துவிட்டு வந்து ஊடகங்களுக்கு கருத்து வழங்கிய வேளையில் அங்கு வந்த இலங்கை இராணுவத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் உத்தியோகத்தர் இராணுவ சீருடையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் தொலைபேசியில் வீடியோ பதிவு செய்து அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.(ப)

#eelamnews #srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate

159 2

2 Comments

* * * <a href="http://sidim.org/upload/go.php">Apple iPhone 15 Free</a> * * * hs=cfde1e3934ba4851b435be0bdbfded76* 26-Mar-2024

w7xknb

* * * Apple iPhone 15 Free: http://sidim.org/upload/go.php * * * hs=cfde1e3934ba4851b435be0bdbfded76* 26-Mar-2024

2mdm58

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.