கனடாவில் கூறிய அநுர
ஆதவன்.
வடக்கில் மீண்டுமொரு போர் ஏற்படாது, புலிகள் மீண்டெழுவார்கள் என தெற்கில் மாயை உருவாக்கப்படுகின்றது, அதற்கான எந்தச்
சாத்தியமும் இல்லை - இவ்வாறு கனடாவுக்குச் சென்றுள்ள அநுரகுமார திஸாநாயக்க அங்குள்ள இலங்கை மக்களுடனான சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார். "எமது நாட்டில் வடக்கில் மீண்டுமொருமுறை போர் ஏற்படவே ஏற்படாது. வடக்கில் உள்ள பெற்றோர், போருக்காகவே பிள்ளைகளை வளர்க்கின்றனர் என்ற மாயையை தெற்கில் தோற்றுவிக்க முற்படுகின்றனர். அதற்காகவே புலிகள் மீண்டெழுவார்கள் என்றெல்லாம் கூறப்படுகின்றது. ஆனால் அவ்வாறு நடக்காது. வடக்கில் உள்ள பெற்றோர் தமது பிள்ளைகளைப் போருக்கு அனுப்ப முற்படவில்லை. தெற்கில் உள்ள பெற்றோர் போலவே கல்வி வழங்கவும், சிறந்த தொழிலைப் பெற்றுக்கொடுக்கவும், சிறந்த எதிர்காலத்தை அமைத்துக்கொடுக்கவுமே எதிர்பார்க்கின்றனர். அதற்கான கதவு மூடப்பட்டுள்ளது. தெற்கைப் போன்று வடக்கிலும் பிரச்சினைகள் உள்ளன. 30 வருடகாலப் போரால் வடக் குக்கான நிறைய வாய்ப்புகள் இல்லா மற்போயுள்ளன. அங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்த துரிதமான அபிவிருத்தி வேலைத்திட்டம் அவசியம். ஏனெனில் 30 வருடங்கள் இழக்கப்பட்டுள்ளன” என்றும் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.