(புதியவன்) உலகில் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இலங்கை முன்னணிக்கு வந்துள்ளதாக இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் மக்கள் தொகையில் 10 வீதம் முதல் 15 வீதம் வரை ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியோர்களை பெரும் மன மற்றும் உடல் உபாதைகளுடன் பாதிக்கிறது எனவும் அவர் கூறினார்.
ஆஸ்துமா சரியாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது உயிரிழப்புக்குக் கூட வழிவகுக்கும். 95 வீதமான ஆஸ்துமா நோயாளிகளை எளிமையான, மிகவும் செலவு குறைந்த, உயர் செயல்திறன் கொண்ட மருந்துகளால் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்த அவர், துரதிர்ஷ்டவசமாக, உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 இலட்சம் பேர் ஆஸ்துமாவால் உயிரிழக்கின்றனர் என மேலும் தெரிவித்தார்.
இவ்வருடம், ஆஸ்துமா தினம் மே 7ஆம் திகதி நினைவுகூறப்படுவதுடன், சுவாச நோய் நிபுணர்கள் சங்கத்தினால் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர் திஸாநாயக்க தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.