உக்ரைன் - ரஷ்யா போரில் இலங்கையர்கள்!
ஆதவன்.
உக்ரைன் - ரஷ்யப் போரில் இரு தரப்புகளிலும் இலங்கையர்கள் ஆயுதமேந்தி மோதல்களில் ஈடுபட்டுள்ளனர் என்று சர்வதேச ஊடகமான 'அல்ஜெசீரா' செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் உள்நாட்டில் காணப்படும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பல இலங்கையர்கள் மொஸ்கோவின் பணத்துக்காக உயிரைப் பணயம் வைக்கத் தயாராக உள்ளனர் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் ரஷ்யப் படைகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றும் 'அல்ஜெசீரா' கூறுகின்றது. (ச)
உக்ரைன் தரப்பில் குறைந்தளவான இலங்கையர்களே ஆயுதமேந்தியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ள 'அல்ஜெசீரா', நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் பணத்துக்காக ரஷ்யா சார்பாக ஆயுத் மேந்தியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.
இலங்கையர்கள் ரஷ்யாவால் மாதாந்தம் வழங்கப்படும் 3 ஆயிரம் டொலருக்காகவும், குடியுரிமையை எதிர்பார்த்தும் ஆயுதமேந்திப் போராடுகின்றனர் என்று 'அல்ஜெசீரா குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், உக்ரைன் தரப்பில் ஆயுத் மேந்திய இரு இலங்கையர்கள் போரில் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், தற்போது ஒற்றை இலக்கத்திலேயே உக்ரைன் தரப் பில் இலங்கையர்கள் உள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.(ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.