புதியவன்
அம்பன்பொல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் முறைப்பாட்டுக்குத் துரித தீர்வு வழங்க பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஏற்பாடு செய்துள்ளார்.
குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் கணவர், பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசி குறுந்தகவல் மூலம் தன் மனைவி எதிர்நோக்கும் சிரமங்களைத் தெரிவித்து முறைப்பாடு செய்திருந்தார்.
இதனடிப்படையில், பொலிஸ்மா அதிபர் குறித்த பொலிஸ் சார்ஜென்ட்டை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர் வசிக்கும் மஹவ பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்துள்ளார்.
இந்தப் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தனது 3 பிள்ளைகள் மற்றும் கணவருடன் மஹவ பொலிஸ் பிரிவில் வசிப்பதாகவும், தினமும் அம்பன்பொல பொலிஸ் நிலையத்துக்கு வருகை தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அம்பன்பொல பகுதிக்குப் பொறுப்பான மூத்த அதிகாரிகள், குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் முறைப்பாடு தொடர்பில் உரிய தீர்வுகளை வழங்கவில்லை என பொலிஸ்மா அதிபர் குற்றம்சுமத்தியுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.