புதியவன்
பொய் முறைப்பாடு செய்த பிரித்தானிய பிரஜையிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானிய பிரஜை அலவத்துகொடையிலுள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்தார்.
இவர் தங்கியிருந்த அறையின் கதவுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
90 ஆயிரம் ரூபா பணம், 2 கைக்கடிகாரங்கள், கமரா உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்த போது, சந்தேகத்துக்குரிய பிரித்தானிய பிரஜை விசாரணைகள் தேவையற்றது எனவும், காப்புறுதி இழப்பீடு பெறுவதற்கு ஆவணம் ஒன்றே போதுமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய பிரஜையின் வாக்குமூலத்தில் சந்தேகமடைந்த பொலிஸார், மேலதிக விசாரணைகளின் போது, அறையின் கதவுகள் உள்ளே இருந்து உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்படி, தற்போது சந்தேகத்துக்கிடமான வெளிநாட்டவர் பொலிஸாரைத் தவிர்த்துவிட்டு அப்பகுதியிலிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.