'ஆலையைத் திறக்க ஆயிரம் பாடு. திறந்து வைச்சால் அவையின்ர பாடு' எண்டு பழசுகள் புறுபுறுக்கிறதைக் கேள்விப்பட்டிருப்பியள். அப்பிடிச் சொல்லுறது இண்டைக்கும் அச்சொட்டாப் பொருத்தமாத்தான் இருக்குது. அதுக்கு நல்ல உதார ணம் பலாலி எயார்போர்ட். அதைத் திறக்கிறதுக்கு இலங்கை அரசாங்கத்துக்கு எள்ளளவும் மனமில்லை. இந்தியாவும், யாழ்ப்பாண ஆக்களும் கடும் பிறஷர் குடுத்தபடியாத்தான், அரைமனதோட அரை குறை வேலையளோட பலாலி எயார்போட்டை அரசாங்கம் திறந்தது.
அப்பிடி படாத பாடுபட்டு பலாலி எயார்போட்டை இயங்க வைச்சால், அதுக்குள்ள ஆயிரம் ரூல்ஸுகளை புதுசாப் போட்டு சனத்தை சிப்பிலியாட்டுற வேலையை மட்டும் சிறப்பாச் செய்யினமாம் எங்கட கஸ்டம்ஸ் அதிகாரிமார்.
கிட்டடியில இந்தியா போட்டு பிளேனில பலாலியில வந்திறங்கிய சிலர், உளுந்து, கடலை, பயறு எண்டு கொஞ்சச் சாமானைத் தங்கட தேவைக்காகக் கொண்டந்திருக்கினம். ஆகமிஞ்சிப் போனால் அஞ்சாறு கிலோவும் வராது. ஆனால் உளுந்து பயறு இறக்குமதிக்குத் தடை எண்டு காரணம் சொல்லி, அவை தங்கட வீட்டுத் தேவைக்காக கொண்டந்த சாமானைக் கூட, 'இறக்குமதி எண்ட லேபிள் குத்தி. கஸ்டம்ஸ் ஒப்பீஸர்மார் வெளியில கொண்டுபோக ஏலாது எண்டு மறிச்சுப்போட்டினம். பிளேனில வந்தவையும் "40 ஆயிரம் சிலவழிச்சு. 4 கிலோ உளுந்தைக் கொண்டாறதுக்குப் பேரோ இறக்குமதி? எது இறக்குமதி எண்டு தெரியாதோ?" எண்டெல்லாம் கேட்டும் அதிகாரிமார் அசைஞ்சும் குடுக்கேலை. கடைசியில அங்கேயே அந்த உளுந்து, பயறு, கடலையெல்லாம் போட்டிட்டு வந்திட்டினமாம்.
இதுக்குப் பிறகு இப்ப ஒரு நாலைஞ்சு நாளைக்குப் பிறகும் இன்னொரு கூத்து நடந்திருக்கு. இந்தியாவுக்குப் போன ஒருத்தர் தன்ர கலியாணத்துக்கு எண்டு இந்தியாவில ஒரு வடிவான பூமாலையைக் கட்டுவிச்சு. தான் வரேக்க பிளேனில் கொண்டந்தி ருக்கிறார். அந்த மாலையும் எங்கட கஸ்டம்ஸ்காரர் கண்ணில எத்துப்பட்டிட்டுது. விடுவினமோ அவை? ஏதோ அணுகுண்டைக் கண்டமாதிரி விழுந்தடிச்சு அந்த மாலையைப் பிடுங்கி வைச்சுக்கொண்டு விண்ணானம் கதைச்சிருக்கினம். "இப்பிடி மாலையெல்லாம் கொண்டு வாறதுக்கு அனுமதி இல்லை. அப்பிடிக்கொண்டுவர வேணும் எண்டால், மாலையை மூண்டுநாள் கொரைண்டன் (தனிமைப்படுத்தல்) பண்ணி, அதால கிருமி ஒண்டும் தொத்தாது எண்டு உறுதிப்படுத்திப் போட்டுத்தான் கொண்டரலாம் எண்டு வாய்க்கு வந்த ரூல்ஸை எல்லாம் அடிச்சு விட்டிருக்கினம். மாலையைக் கொண்டு வந்தவரும் கனநேரமா வாதாடிப் பார்த்தார். கஸ்டம்ஸ்காரர் இளகிறதாத் தெரியேலை. மாலைக்காக வாதாடிய மணவாளனுக்கு கோபம் உச்சிக்குப் போட்டுது. "இப்ப மாலையைக் கொண்டந்தபடியால தானே உவ்வளவு செட்டுக்காட்டுறி யள்?எனக்கு உந்த மாலையே வேண்டாம்" எண்டு கத்திக்கொண்டு. மாலையை அப்பிடியே பிய்ச் செறிஞ்சு போட்டு வந் திட்டார். போதைப்பொருள் வாறதையெல்லாம் பிடிக்க வக்கில்லாதவை தங்கட வீரத்தை உளுந்திலையும், மாலையிலையும் தான் காட்டிக் கொண்டிருக்கினம். உப்பிடியான கஸ்டம்ஸ் காரரை வைச்சிருந்தா நாடு உருப்படுறதும் கஷ்டம் கண்டியளோ..
(05.04.2024- உதயன் பத்திரிகை)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.