செத்த பிறகும் நிம்மதியா இருக்க முடியாத நாடெண்டால் அது எங்கட நாடாத்தான் இருக்க முடியும். ஒருத்தர் செத்தபிறகு அவரின்ர 'பொடி (சடலம்) அலைஞ்ச கதை முந்தநாள் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரியில நடந்திருக்குது.
போன ஏப்ரல் மாசம் 3ஆம் திகதி அக்சிடெண்டில ஒராளுக்கு கடும்காயம். கிட்டத்தட்ட ஆள் இயங்க முடியாத நிலை. அதால் அவரை ஊர்காவற்றுறையில உள்ள ஆஸ்பத்திரியில வைச்சுப் பராமரிச்சு வந்தவை. அங்க இருக்கேக்க ஆளுக்கு நிமோனியாவாக்கி, நிலைமை மோசமாகிட்டுது. அதால உடனடியா ஆளை யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டந்திருக்கினம். அங்க வந்தும் பிரியோசனமில்லாமல், ஆள் செத்துப்போச்சு.
அதுக்குப் பிறகுதான் குளறுபடி தொடங்கியிருக்கு. அந்த வார்ட்டுக்குப் பொறுப்பான டொக்டர், மேலோட்டமாப் பாத்தாரோ என்னவோ அக்சிடெண்ட் விசயத்தை கவனத்தில எடுக்காமல் 'நிமோனியாவால இறப்பு' எண்டு கேஸை முடிச்சு. பொடியை வீட்ட கொண்டுபோக பெர்மிஷன் குடுத்திட்டார். வீட்டுக்காரரும் காரை நகரில இருக்கிற வீட்டுக்கு பொடியைக் கொண்டுபோய், செத்தவீட்டுக்கான வேலையளைப் பாத்திருக்கினம்.
அந்த நேரத்தில ஆரோ மானிப்பாய் பொலிஸுக்கு போன்பண்ணி, இப்பிடி அக்சிடெண்டில செத்தவரின்ர பொடியை போஸ்ட்மோட்டம் செய்யாமல் கொண்டு போட்டினம் எண்டு போட்டுக் குடுத்திருக்கினம். அதுக்குப் பிறகு மானிப்பாய் பொலிஸ்காரர் ஆஸ்பத்திரியில போன் அடிச்சு விசயம் உண்மையோ எண்டு கேட்டிட்டு, காரைநகருக்குப் பறந்துபோய், செத்தவரின்ர பொடியை திரும்ப பெரியாஸ்பத்திரிக்கு கொண்டுவரச் சொல்லி இருக்கினமாக்கு கியையல் பிறகு அந்த செத்தவரின்ர பொடியை பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டுபோய். - போஸ்ட்மோட்டம் எல்லாம் முடிச்சு கனநேர அலைச்சலுக்குப் பிறகுதான் வீட்டை கொண்டந்து " சேர்த்தவையாம். வழக்கமா ஆஸ்பத்திரியில் நோர்மல் வருத்திங்களால் சாகிறவையின்ர 'பொடியை போஸ்ட்மோட்டம் செய்யாமல் மனிதாபிமான அடிப்படையில் வீட்டுக்காரரிட்டக் குடுக்கிறவையாம்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு அப்பிடியெல்லாம் 'செய்யாமல், எல்லாத்தையும் சட்டப்படி செய்த பிறகுதான் பொடியைக் குடுக்கோணும் எண்டு இறுக்கமா உத்தரவு போடுப்பட்டிருக்காம்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.