இப்ப எங்கட பெடி பெட்டையளுக்கு 'அங்கரைப் 'பச்சைத்தான்' திறமெண்ட மாதிரி ஒரு மனநிலை வந்திட்டது, உள்ளூரில் எத்திணையோ நல்ல விசயங்கள் இருந்தாலும் அதையெல்லாம் ஏணெண்டும் எட்டிப்பாக்கமாட்டம். ஆனால் அதே விசயத்தை வெளிநாடுகளில் ஆரும் செய்தால், விழுந்தடிச்சுப் பாப்பம். 'எல்லாம் அவங்களாலதான் முடியும். எங்கட ஆக்கள் கிட்டவும் நிக்க ஏலாது எண்டு தாங்களாவே ஒரு ஒப்பீடு செய்து பத்தியப்பட்டுக் கொள்ளுவினம், ஆனால் எங்கட ஊரில் இருக்கிற திறமையளை வெளிநாட்டில இருக்கிறவை வடிவா இனங்கண்டு இஞ்சையிருந்து கொத்திக்கொண்டு போன கதையளுமிருக்கு. இந்த அக்கரைப்பச்சை மனநிலையாலதான் ஹரிகரன்ர இசை நிகழ்ச்சிக்கும். போன ஞாயிற்றுக்கிழமை கொழும்பில நடந்த இளையராஜான்ர கச்சேரிக்கும் காசை விட்டெறிஞ்சாலும் பரவாயில்லை எண்டிட்டு எங்கட ஆக்கள் பெருந்திரளாப் போனவை. அதுகள் மட்டுமில்லை இந்தியாவில இருந்து சுப்பர் சிங்கர், ஸரிகமப எண்டு ரீவி புரோக்கிராமில பாடி பேமஸானவை வந்தாலும் அள்ளுப்பட்டுக்கொண்டு போறதில் எங்கட ஆக்களும். யூரியுப்காரரும் ஒரு குறையும் வைக்கிறேலை.
இப்ப எப்பிடி உந்த இந்திய இறக்குமதியளுக்கு நாங்கள் ஓடுப்பட்டுத் திரியிறமோ அப்பிடி முந்தி யொருகாலத்தில எங்கட ஆக்களைப் பாக்க இந்திய ஆக்கள் முண்டியடிச்சவை. ஆறுமுகநாவலரில் இருந்து தவில் வித்துவான் தட்சணாமூர்த்தி வரைக்கும் கலை, அரசியல், இலக்கியம், கல்வி எண்டு எல்லாத்திலையும் எங்கட ஆக்களுக்குத்தான் அப்ப கடும் மதிப்பு, தட்சணாமூர்த்தியைப் பற்றி இந்தியாவில எடுத்த ஆவணப்படத்துக்கு தேசிய விருதெல்லாம் கிடைச்சது. இப்ப அதெல்லாம் பழங்கதையா. கனவாப்போட்டுது. ஆனாலும் எங்கட இடத்தில திறமையளுக்கும், ஆளுமையளுக்கும் பஞ்சம் அப்பவும் இருக்கேலை, இப்பவும் இல்லை. தங்கட திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காட்டியும் பாறையில முளைக்கிற மரம் மாதிரி எங்கடையாக்களும் ஆளுமையோடதான் இருக்கிறம். கொஞ்ச நாளா எல்லாரும் கில்மிஷாவைக் கொண்டாடினம். இப்ப அந்தப் பிள்ளையை பெரிசா ஒருத்தரும் கொண்டாடுறதைக் காணேலை. இதுவே இந்தியா எண்டால் அந்தப் பிள்ளைக்கு இன்னும் நாலைஞ்சு வருசத்துக்கு ஓயாமல் கச்சேரி இருந்திருக்கும். என்ன செய்ய, அந்தப்பிள்ளை இஞ்சையெல்லோ பிறந்திட்டுது.
இப்பிடிப்பட்ட நேரத்தில சீரணி அம்மனில் ஒரு பாராட்டு விழா நடந்திருக்கு. அங்க முந்தநாள் நடந்த திருவிழாவில எங்கட ஊரில இருக்கிற குமரன். பாலமுருகன் ரண்டுபேரையும் யானையில ஏத்தி. ஊர்வலமா கொண்டுவந்து பிறகு மேடையில வைச்சும் கௌரவிச்சு இருக்கினம். ஊக்குவிக்கிறவை இருந்தால் ஊக்குவிக்கிறவனும் தேக்குவிப்பான் எண்டுறவை. ஏற்கனவே இந்த ரண்டு வித்துவான்களும் நாடறிஞ்ச நாதஸ்வரக் கலைஞர்கள்தான். ஆனால் அவைக்கு கிடைச்சகெளரவம் இன்னும் அவையை மாதிரி வரவேணும் எண்ட ஆசையையும், அப்பிடிவந்தால் எங்கட சமூகம் யானையளவு மதிக்கும் எண்ட கனவும் இளைய தலைமுறைக்கு வருமெல்லோ. இப்பிடி எங்கட ஆக்களை நாங்களே பாராட்டி, கௌரவிச்சால் அக்கரைப் பச்சைக் கனவும் இல்லாமல் போடுமெல்லோ.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.