(ஆதவன்)
நாட்டில் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட அதிரடிப்ப டையினருக்குப் பயிற்சியளிக்கப்படவுள்ளது என்று பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
அதன்படி தப்பிச் செல்லும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களை மோட்டார் சைக்கிள்களில் துரத்திச் சென்று துப்பாக்கிச்சூடு நடத்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.
விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த 100 பேர் இந்த துப்பாக்கிச்சூட்டு பயிற்சிக்கு உட்படுத்தப்படவுள்ளனர். எதிர்வரும் மூன்று மாத காலப் பகுதிக்குள் நாட்டிலி ருந்து போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழு செயற்பாடுகள் இல்லாதொழிக்கப்படும் என்றும் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்தார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.