ஆயிரம் கொடுத்து ஆனை வாங்கினவன் அஞ்சு காசுக்கு அங்குசம் வாங்கப் பேரம் பண்ணினானாம். இப்பிடித்தான் இருக்குது உந்த யாழ்ப்பாணம் 'பூநகரி றோட்டில இருக்கிற சங்குப்பிட்டியின்ர நிலைமை. கோடிக்கணக்கில காசைக் கொட்டி போட்ட சங்குப்பிட்டிப் பாலத்துக்கு வடிவே அங்க போடுப்பட்ட அந்த சோலர் லைற்றுகள்தான். இரவில அந்தப் பாலத்தால ஏறி இறங்கிப் போகேக்க றோட்டு நீளமும் இந்த சோலர் விளக்குகள் அப்பிடியே வரிசையா எரிய, அந்த வெளிச்சம் கடலில பட்டுத் தெறிக்க... சும்மா சொல்லக்கூடாது வெளிநாடுகளில கூட இப்பிடி ஒரு காட்சியைக் காணேலாது. அந்தளவுக்கு அம்சமா இருந்தது. கனபேர் இதுக்காகவே அங்க இரவிலபோய் ஷூட்டிங் எல்லாம் எடுத்தவை. ஆனால் எல்லாம் கொஞ்ச நாளைக் குத்தானே.
இப்ப சங்குப்பிட்டிப் பாலமும் கறுத்து, கறள் பிடிச்சு எலும்புக்கூடு மாதிரி மாற, அங்க போடுப்பட்ட 106 சோலர் லைற்றுகளும் செத்துப்போய். அந்த றோட்டே இரவில பேய்றோட் மாதிரிக் கிடக்குது. இருந்திட்டு ஒண்டிரண்டு லைற்றுகள் மட்டும் மிச்ச மிருக்கிற உயிரைக் கையில பிடிச்சுக் கொண்டு கண்ணடிச்சு 'எங்களைக் காப்பாத்த மாட்டியளோ?" எண்டு கெஞ்சுறதை அந்த றோட்டால பிக்கப்பில பறந்து திரியிற வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்காரர் கண்டுகொள்ளுறதேயில்லை. இந்த 106 லைற்றுகளின்ரயும் சோலர் பற்றரி பழுதாப்போட்டுது. ஒண்டி ரண்டு பற்றரியளை எங்கட விண்ணர்மார் சிலர் கழட்டிக்கொண்டும் போட்டினம். உந்த லைற் ஒண்டின்ற அப்பத்தைப் பெறுமதி ரண்டரை லட்சம். இப்பவெண்டால் 5 லட்சத்துக்கு மேல வருமாம். அப்ப 106 லைற்றுக்கும் 5 கோடிக்கும் மேல வரும். ஆனால் தங்களிட்ட அவ்வளவு காசில்லை எண் டிட்டு உதுக்குப் பொறுப்பான கிளிநொச்சி வீதி அபி விருத்தி அதிகாரசபை அதிகாரிமார். தரையில கால் படாமல் காருகளில ஓடித்திரியினமே தவிர உருப் படியா வேற ஏதும் வழி இருக்கோ எண்டு யோசிக் கினமில்லை.
இந்த நிலையில, பூநகரிப் பிரதேசசபை, இந்த லைற்றுகளுக்கு கறண்ட் குடுத்து. ஒரு கொன் வேட்டரும் போட்டால் பழையபடி அந்த றோட்டை வெளிச்சமாக்கலாம் எண்டு ஐடியா குடுத்திருக்கினம். அதுக்கு முதல்ல மின்சாரசபைக்காரரும் இன்னும் ஒரு முந்நூறு மீற்றருக்கு போஸ்ட்போட்டு கறண்டைக் குடுக்கோணும், மிச்சவேலையளுக்கும் காசு குடுக்க பிரதேசசபை ரெடி. கொஞ்சக்காசோட இந்த வேலையை வடிவா முடிக்கலாமாம்.ஆனால் மின்சாரசபையும், வீதி அபிவிருத்தி அதிகார சபையும் இந்த நல்ல ஐடியாவைக் கூடகணக்கில எடுக்கேலை. சிலவேளை கொஞ்சக்காசோட வேலையை முடிக்க லாம் எண்டதால தங்களுக்கு 'வெட்டுக் கொத்து ஒண்டுமில்லையெண்டும் அவை நினைக்கினமோ தெரியேலை.
அந்த றோட்டில ஒரு பிள்ளையார் சிலைவைச் சதுக்கு பொங்கியெழுந்து, கோர்ட்டில் கேஸெல்லாம் போடத்தெரிஞ்ச வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு 106 லைற்றுகள் பமுதாப்போய், சனம் சங்குப்பிட்டி றோட்டில் போய்வர ஏலாமல் அந்தரப்படேக்க மட்டும் வந்து பார்த்து வேலை செய்யத் தெரியேலை எண்டால் பருங்கோவன்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.