இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஒன்பது இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் இராமேஸ்வர பகுதியைச் சேர்ந்தவர்களாவார்.
நெடுந்தீவு அருகே நேற்று திங்கட்கிழமை இரவு தமிழக கடற்றொழிலாளர்களின் படகு இருந்த போது படகையும் அதிலிருந்த ஒன்பது கடற்றொழிலாளர்களையும் கைது செய்துள்ளனர்.
இயந்திர பழுது காரணமாக படகு கரை ஒதுங்கியுள்ளதால் உயர் அதிகாரிகள் அனுமதி அளித்தால் படகையும் மீனவர்களையும் விடுதலை செய்ய வாய்ப்பு உள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, நேற்று இன்னுமொரு படகும் வெறுமையாக கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த படகு தொடர்பிலும் கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.