கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திருவையாறு மூன்றாம் பகுதியில் அமைந்துள்ள வீடுடொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை உறவினர்களுக்கு இடையே வாய்த்தக்கம் இடம்பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து நேற்றிரவு இனம் தெரியாதவர்களால் பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளதுடன் கேற் மற்றும் மோட்டார் சைக்கிள், வீட்டின் கதவு, மின்விளக்கு, பூச்சாடிகள் என்பனவற்றை இனம் தெரியாதவர்கள் கொத்தி நாசமாக்கப்பட்டுள்ளதுடன் சேதமாக்கப்பட்ட மோட்டார் சைக்கிளையும் களவாடி சென்று உள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துவிட்டு திரும்பி வருகையில் வீட்டு உரிமையாளர் மீதும் வாள்வேட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தையடுத்து திருவையாறு பகுதியில் பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் அப்பகுதிகளில் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.