பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டிவிட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும் பாகற்காய் பல நாட்கள் வரை புழுக்காமல் இருக்கும் .
சமைக்கும் போது பச்சை கொத்தமல்லியையும் கறிவேப்பிலையையும் ஒன்றாக வதக்கக் கூடாது. ஏனென்றால் பச்சையாக உணவில் சேர்த்தால் தான் அதில் இருக்கும் சத்துக்கள் உணவில் அதிகமாக இறங்கும் .
வீடு சமையலறையில் ஒரு டம்ளர் மண் நிரப்பி சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் ஊன்றி வைத்தால் அது துளிர்விட்டு வளர்ந்தும் அதன் வாடைக்கு பல்லி வரவே வராது. இதனால் தவறுதலாக சமையல் பொருட்களில்பல்லி விழுதல் தடுக்கலாம்.
எலிக்கு புதினா வாசனை பிடிக்காது .எனவே புதினாவையோ அல்லது புதினா எண்ணெயையோ அவை வரும் இடங்களில் வைக்கலாம் வெங்காயப் பேஸ்ட் மிளகாய் தூள் போன்ற்வற்றையும் நீரில் கலந்து தெளித்தால் கரப்பான் வராது
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.