ஆதவன்.
பொதுஜன பெரமுனவின் அரசதலைவர் வேட்பாளர் யார்? என்பது தொடர்பில் மே தினக் கூட்டத்தின்போது அறிவிப்பதற்கு கட்சி மட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெரமுனவின் மே தினக் கூட்டம் அந்தக் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோரை பங்கேற்க வைப்பதற்குரிய ஏற்பாடுகளை பொதுஜன பெரமுன முன்னெடுத்துவருகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன அரசதலைவர் தேர்தல் தொடர்பிலும், வேட்பாளர் சம்பந்தமாகவும் தமது நிலைப்பாடுகளை அறிவித்துள்ளன. எனினும், அரசதலைவர் தேர்தல் வேட்பாளர் குறித்து பெரமுன இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நிலையிலேயே, அரசதலைவர் தேர்தல் தொடர்பான தன் நிலைப்பாட்டை மே தினக் கூட்டத்தில் வைத்து பெரமுன அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.