(புதியவன்)
இலங்கையின் முதலாவது ஸ்ரோபெரி செய்கை முன்மாதிரி கிராமத்தை நுவரெலியாவில் அமைப்பதற்கு விவசாய அபிவிருத்தி பணிமனை நடவடிக்கை எடுத்துள்ளது.
புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏற்றுமதியை இலக்காக கொண்டு புதிய செய்கைகளுக்கு விவசாயிகளை பழக்கப்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர கமநல அபிவிருத்தி பணிமனைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கமைய திட்டத்துக்கென நுவரெலியா மாவட்டத்தில் 40 விவசாயிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான நிதி, செய்கைக்கான ஸ்ரோபெரி மரக்கன்றுகள், தேவைப்படும் தொழில்நுட்ப வளங்கள் மற்றும் நீர்வளம் என்பவற்றை வழங்குவதற்கு கமநல அபிவிருத்தி பணிமனை நடவடிக்கை எடுத்துள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.