(அமுதரசி)
மலையகத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதற்கான அரசிதழ் நேற்றைய தினம் (ஏப்ரல் 30) தொழிலாளர் ஆணையாளர் நாயகம் எச். கே. கே. ஏ. ஜயசுந்தரவினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறாக,
"ஏப்ரல் 25, 2024, அரசிதழ் எண் 2381/35 இல் வெளியிடப்பட்ட 33(1) (அ) சட்டத்தின் (அத்தியாயம் 136) பிரிவு 33 (1) (அ) இன் கீழ் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் பணிப்புரைக்கமைய எனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி, 1, எச். கே. கே. ஏ. ஜயசுந்தர, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் ஆகிய நான், மேற்கூறிய கட்டளைச் சட்டத்தின் 28வது பிரிவின் கீழ் கீழ்கண்ட அட்டவணையில், பிரிவு 33(2)ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தேயிலை சாகுபடி மற்றும் உற்பத்தி வர்த்தகத்தில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க உத்தேசித்துள்ளேன் என்பதை இதன் மூலம் அறிவிக்கிறேன்.
அந்த கட்டளை முன்மொழியப்பட்ட தீர்மானத்துக்கெதிரான ஆட்சேபனைகள் ஏதுமிருப்பின் 2024 மே மாதம் 15ஆம் திகதியன்று மதியம் 12.00 மணி வரை என்னிடம் சமர்ப்பிக்க முடியும்.
அத்தகைய ஒவ்வொரு ஆட்சேபனையும் அறிக்கையுடன் கூடிய எழுத்துப்பூர்வ வடிவிலேயே சமர்ப்பிக்கப்பட வேண்டும். என குறித்த அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பெருந்தோட்டத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கும் நடைமுறையானது நாளாந்த சம்பளம் ஆயிரத்து 350 ரூபாவாகவும், (இந்தத் தொகையானது தினசரி பாதீட்டு நிவாரண உதவித்தொகையை உள்ளடக்கியதுடன் ஈ.பி.எப் மற்றும் ஈ.ரி.எப்க்கு விண்ணப்பித்தவர்களுக்கானது) தினசரி சிறப்பு கொடுப்பனவு 350 ரூபாவாகவும், மொத்த நாளாந்த சம்பளம் ஆயிரத்து 700 ரூபா எனவும் மேலதிக தேயிலை, கிலோ ஒன்றுக்காக வழங்கப்படும் கொடுப்பனவு 80 ரூபா எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குறித்த அரசிதழில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.