(இனிய பாரதி)
அரங்க சமூக அரசியல் செயற்பாட்டாளரும் கிராமிய உழைப்பாளர் சங்க நிறுவுனர்களில் ஒருவருமான சரவணை பாலசிங்கம் (பாலா மாஸ்டர்) அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு அரங்கம் நேற்று (27) உரும்பிராய் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.
இதில் கலாநிதி சிறிகணேசன் , ரொசாங்கன் , அ. நாகரத்தினம் ஆகியோர் அஞ்சலி உரைகளை நிகழ்த்தினார்கள்.
மேலும் ஒடுக்கப்பட்டோரின் ஆயுதமாக அரங்கு என்ற தலைப்பில் கலாநிதி தே.தேவானந்த் உரை நிகழ்த்தினார். கிராமிய கலைகளின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் புதுவை அன்பின் அவர்கள் உரையாற்றினார், தோழர் சுகி அவர்கள் பாலா அவர்களில் அரசியல் பணிகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இதனைத் தொடர்ந்து தேவை, சத்திரிய தர்மம் நாடகங்களும் மேடையேற்றப்பட்டன.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.