அநுரகுமார கூறுகின்றார்!
ஆதவன்.
பல ஆண்டுகளாக ஆட்சியாளர்களால் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த தமிழ் மக்களின் ஆதிகாரத்துக்கான நியாயமான உக்கும் பெற்றுக கொடுக்கப்படல் வேண்டும். மாகாணசபைமுறையால் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்காது.
-இவ்வாறு 'சண்டே ரைம்ஸ்' ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியில் ஜே.வி.பி.யின் தலைவர் அநுர குமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
நாட்டின் இனப்பிரச்சினைக்கு மாகாணசபை முறையே முழுமையான தீர்வு என நாங்கள் கருதவில்லை. வடக்கு - கிழக்கு மக்கள் மாகாணசபைகளை தங்களின் உரிமைகளில் ஒன்று எனக் கருதுகின்றனர். இலங்கையில் பல வருடங்களாக அரசியல் என்பது ஒரு சமூகத்தை மற்றைய சமூகத்துடன் மோத விடுவதாகக் காணப்படுகின்றது. ஒருவரை ஒருவர் தூண்டிவிடுகின்ற பிரிவினைவாத அரசியல் கலாசாரத்தால் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காணமுடியாது.
இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கான முதல் நடவடிக்கையாக சமூகங்களைப் பிரிப்பதற்கு பதில் அனைத்து சமூகங்களையும் ஒன்றி ணைக்கும் அரசியல் முறையை உருவாக்க வேண்டும். நாங்கள் அதனையே செய்கின்றோம்- செய் வோம் - என்றார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.