ஆதவன்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குக் காரணமானவர்களை தூக்கிலிடுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
சில மாதங்களுக்கு முன்னர் விபத்து ஒன்றுக்கு காரணமாயிருந்த சாரதிக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைத் தடுக்கத்தவறியவர்களுக்கு தண்டம் விதிக்கப்படுகிறது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெற்ற வேளையில் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்தவர் ஒரு திறமையற்றவர். ஒழிக்கப்பட்ட பயங்கரவாதம் வீறு கொண்டு எழுந்தது. இப்போது தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பாக இருப்பவரும் திறமையற்ற ஒருவர்தான். இவர் பாதுகாப்புக்குழுக் கூட்டங்களை ஒழுங்காக கூட்டுவதில்லை. அத்துடன் பாதுகாப்புச் செயலர், பொலிஸ்மா அதிபர், பிரதமர் ஆகியோர் பாதுகாப்புக்குழுக் கூட்டங்களுக்கு அழைக்கப்படுவதில்லை. அரச புலனாய்வுப்பிரிவுப் பிரதானி தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்த போது அப்போதைய அரசத்தலைவருடன் தொடர்பு கொள்வதற்கு இரு தடவைகள் முயன்ற போதும் அரசத்தலைவரின் தொடர்பு கிடைக்கவில்லை எனக்கூறப்படுகிறது. என்னால் இதை நம்பமுடியாது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர் பான விசாரணை ஒப்படைக்கப்பட்டால் அடிமட்டம் வரை சென்று உண்மைகளைக் கண்ட றிவேன் - என்றார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.