(புதியவன்)
இந்த வருடத்தின் முதல் 04 மாதங்களில் மாத்திரம் இரண்டாயிரத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் கொரிய வேலைகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த 4 மாதங்களில் மொத்தமாக இரண்டாயிரத்து 64 பேர் தென்கொரிய வேலைகளுக்கு சென்றுள்ளதாக பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, உற்பத்தித்துறை தொடர்பான வேலைகளுக்காக ஆயிரத்து 708 பேரும், மீன்பிடித்துறைக்கு 351 பேரும், கட்டுமானத்துறைக்கு 5 பேரும் தென்கொரியாவுக்குச் சென்றுள்ளனர்.
இவர்களில் ஆயிரத்து 892 பேர் முதல் முறையாக தென்கொரியாவுக்கு வேலைக்காக சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் 41 பெண்களும் தென்கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.