சீன அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழுவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது.இதன்போது இரு தரப்பினரும் சமூக,பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் பல்வேறு பரஸ்பர கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இக் கலந்துரையாடலில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் அரசியல் விவகாரப் பிரிவின் உறுப்பினரும்,மத்திய குழுவின் சோங்கிங் மாநகர குழுவின் செயலாளர், சீனாவுக்கான இலங்கைத் தூதுவர், பிரதி அமைச்சரும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் துறையின் பிரதானி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சோங்கிங் மாநகர குழுவின் நிலைக்குழு உறுப்பினரும்,நிறைவேற்று பிரதி மேயர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சோங்கிங் மாநகர குழுவின் நிலைக்குழு பொதுச் செயலாளர், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் துறையின் பணியகத்தின் பொதுச் செயலாளர், சீன தூதரகத்தின் தூதுக்குப் பிரதிப் பிரதானி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சோங்கிங் மாநகர குழுவின் துணைப் பொதுச்செயலாளர், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் துறையின் Protocol பணியகத்தின் பணிப்பாளர் நாயகம், மேதகு சேர் யுவான் ஜியாஜுங்கின் செயலாளர், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் துறையின் பணியக பனிப்பாளர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் துறையின் பணியகத்தின் பிரதி பனிப்பாளர், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் துறையின் உரைபெயர்ப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.