குருநாகல்-நாரம்மலை பிரதேசத்தில் நேற்றயதினம் செவ்வாய்க்கிழமை வாய்பேச முடியாத இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தந்தை மீது வாள்வெட்டினை மேற்கொள்ள வீட்டிற்கு வந்த குழுவினர் தந்தை தப்பியோடியதை அடுத்து குறித்த இளைஞன் மீது வாள்வெட்டினை மேற்கொண்டுள்ளனர். 29 வயதுடைய லசந்த பண்டார என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளார் எனவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர் .
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.