11 பாடசாலை மாணவிகளை வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான ஆங்கில ஆசிரியரை பிணையில் செல்ல நேற்று வியாழக்கிழமை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
குருநாகல் பிரதேசத்தில் தரம் 5 இல் கல்வி பயிலும் 11 மாணவிகளை வன்புணர்விற்கு உட்படுத்தியதாக பெற்றோர் முறைப்பாடு செய்தமையால் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 55 வயதான ஆங்கில ஆசிரியர் கைது செய்யப்பட்டிருந்தார்.
நேற்றைய தினம் நீதிமன்றலில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
குறித்த ஆசிரியரின் சேவையை உடனடியாக இடைநிறுத்துமாறு வடமேல் மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.