களுத்துறையில் யூடிப் சமூக வலைதளத்தை முன்னோடியாகக் கொண்டு வீடியோக்களை பார்த்து துப்பாக்கி தயாரித்த இருவர் துப்பாக்கிகள்,அவற்றை தயாரிக்க பயன்படுத்திய உபகரணங்களுடன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து T-56 ரக துப்பாக்கி, 5 அடி நீள துப்பாக்கி, 7.62, .39 ரவைகள், துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்தப்படும் இரண்டு கிரைண்டர்கள் மற்றும் கிரில் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
பதுரலிய சீலதோல பிரதேசத்தைச் சேர்ந்த 41 மற்றும் 21 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் உறவிர்கள் எனத் தெரியவந்துள்ளது.
போராட்டத்தின் போது பதுரலிய பிரதேசத்தில் சுமார் 14 கோடி ரூபா பெறுமதியான வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை எரித்து நாசம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபரே பிரதான சந்தேக நபர் எனவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.