போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தலைமையில் ஊடக சந்திப்பு ஒன்று நேற்றைய தினம் அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன் போது வடக்கிற்கான சுற்றுலா தொடருந்து சேவைக்கு ‘யாழ் நிலா அதி சொகுசு’சேவை என பெயரிடப்பட்டுள்ளதகவும் தொடருந்து சேவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி கல்கிஸையிலிருந்து ஆரம்பமாகி காங்கேசன்துறை வரை நடைபெறவுள்ளது எனவும். வார இறுதி நாட்களில் வெள்ளிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்த சேவை சனிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் காங்கேசன்துறை சென்றடையும். மீண்டும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணிக்கு தொடங்கி அதிகாலை 5.00 மணிக்கு கல்கிஸையை வந்தடையும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.