கொழும்பு-கம்பஹா பகுதிகளில் நேற்றைய தினம் இரு துப்பாக்கிப் பிரயோகக் கொலைகள் பதிவாகியுள்ளன.கம்பஹா - கந்தானை பிரதேசத்தில் 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான முச்சக்கரவண்டிச் சாரதி ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தனது முச்சக்கரவண்டியில் வீடு திரும்பிய குறித்த குடும்பஸ்தர் வீட்டு வாசலில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் துப்பாக்கிப் பிரயோகத்திக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, கொழும்பு, வாழைத்தோட்டத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், வீதியின் அருகில் நின்றிருந்த இளைஞரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.
வாழைத்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய குறித்த இளைஞர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.