நேற்று இரவு மன்னார் உயிலங்குளத்திலிருந்து நெடுங்கண்டல் வீதியில் பலத்த காயங்களுடன் நபர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்
கயத்திற்குள்ளான நபர் அடம்பன் வைத்தியசாலையிலிருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
மேற்படி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் நெடுங்கண்டல் (அடம்பன் தாமரைக்குளம்) பகுதியை சேர்ந்த ராசலிங்கம் அமர்நாத் என்று தெரிய வருகிறது
குறித்த நபருக்கு நிகழ்ந்த சம்பவம் விபத்தா? அல்லது வாள் வெட்டு சம்பவமா? என்பது மேலதிக விசாரணைகளின் பின்னரே தெரியவரும் என அடம்பன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.