கைது செய்யப்பட்ட மன்னார் செஞ்சிலுவை சங்கத்தின் முன்னால் சர்சைக்குரிய தலைவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த வாரம் அத்துமீறி செஞ்சிலுவை சங்ககட்டிடத்தை மூடி அடாவடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் மது போதையில் வாகனம் செலுத்திய போது மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபர் முன்னதாவே பல அதிகார துஸ்பிரயோக செயற்பாடுகளில் ஈடுபட்ட போதும் அதிகாரத்தை பயன்படுத்தி மன்னாரில் உள்ள மதம் சார்ந்த அமைப்பு ஒன்றுடன் இணைந்து குற்றச்சாட்டினை இல்லாதொழித்தவராவார்.
தற்காலங்களில் அவரது பதவி பறிக்கப்பட்டதை அடுத்து அவர் செய்த பல்வேறு ஊழல் மற்றும் அதிகார துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்பிலான செய்திகள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.