ஸ்மார்ட் போன்களின் செயலி மூலம் செயற்படக்கூடிய டிஜிட்டல் கடவுச்சீட்டினை முதன் முதலாக பின்லாந்து அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
கடல் கடந்த பயணங்களை நவீனமயமாக்குதலையும், பாதுகாப்பினையும் அடிப்படையாக கொண்டே இந்த டிஜிட்டல் கடவுச்சீட்டு திட்டம் முன் மொழியப்பட்டுள்ளது.
இத்திட்ட செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக ஃபின்ஏர், ஃபின்னிஸ் காவல்துறை ,ஃபின்ஏவியா மற்றும் விமான நிலைய செயற்பாட்டாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழு ஒன்றினை அறிமுகப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் கீழ் தற்போது உலகில் முதன் முதலாக டிஜிட்டல் கடவுச்சீட்டு பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் இந்த, டிஜிட்டல் கடவுச்சீட்டினை பயன்படுத்தும் முறைமை தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் சில நாடுகளுக்கிடையில் மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.