கனடா தூதரகத்தின் அதிகாரிகள் 40 பேரை இந்தியா வெளியேற்றப்போவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவுக்கும் கனடாவுக்கு இடையே மிகப்பெரும் மோதல் இடம்பெற்று வரும் நிலையில் 40 கனேடிய தூதரக அதிகாரிகளை திரும்பப்பெறுமாறு இந்தியா கனடாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதிக்கு இடையில் அவர்கள் வெளியேறவில்லை எனின் அவர்களது பொறுப்பை நீக்கிவிடுவோம் என இந்தியா அழுத்தமாக தெரிவித்துள்ளது.
தற்போது இந்தியாவில் மொத்தம் 62 கனடா அதிகாரிகள் காணப்படும் நிலையில் அவர்களது எண்ணிக்கையை 41 ஆக குறைக்க வேண்டும் என இந்தியா தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் காலிஸ்தான் பயங்கரவாதியை கொன்றதில் இந்தியாவுக்கு தொடர்புள்ளதாக முனவைக்கப்பட்ட குற்றச்சாட்டின் காரணமாக இந்திய - கனடாவுக்கான உறவு மோசமாகியது.
தற்போது 40 கனடா அதிகாரிகளை இந்தியா வெளியேற்றவுள்ளமை மேலும் குறித்த இரு நாடுகளுக்கான உறவில் விரிசலை உருவாக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் இந்திய அரசாங்கம் இது குறித்த எந்தவித உத்தியோக பூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.