ஆதவன்.
புதுடில்லியின் முதல்வர் அரவிந்த் கேஜ்ரி வாலை, திஹார் சிறைக்குள் வைத்துக் கொல்வதற்குச் சதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. புதுடில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் புதுடில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் அண்மையில் கைதுசெய்யப்பட்டு, நீதி மன்ற உத்தரவுக்கமைய திஹார் சிறையில் விளக்கமறியல் கைதியாக உள்ளார். இந்த நிலையிலேயே, கேஜ்ரிவாலைக் கொல்வதற்கு சிறையில் சதிநடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியுள்ளது.
கேஜ்ரிவாலுக்கு நீரிழிவு நோயுள்ளது. இதனால் அவருக்கு இன்சுலின் மருந்து வேண்டும் என்றும் குடும்ப மருத்துவருடன் வீடியோ மூலம் ஆலோசனைபெற அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், சிறைநிர்வாகம் இதை ஏற்க மறுத்துவிட்டது. கேஜ்ரிவால் மெதுவாக மரணமடைய வேண்டும் என்பதற்காக சிறையில் சதி நடக்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் பேச்சாளரும் புதுடில்லி மாநில அரசாங்கத்தின் அமைச்சருமான சவுரவ் பரத் வாஜ் தெரிவித்துள்ளார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.