அகிலேஷ் யாதவ் தெரிவிப்பு!
ஆதவன்.
இந்திய மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. வினர் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை என்று உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் கருத்துத் தெரிவித்துள்ளார். இந்திய மக்களவைத் தேர்தல் தற்போது கட்டம்கட்டமாக இடம்பெற்று வருகின்றது. இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில், முஸ்லிம்களுக்கு எதிரான தீவிரமான பரப்புரைகளை பா.ஜ.க. அப்பட்டமாகக் கையிலெடுத்துள்ளது. இதற்கு, தோல்வி பயமே காரணம் என்று விமர்சிக்கப்படும் நிலையிலேயே, பா.ஜ.க.வினர் எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்கவில்லை என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.