ஆதவன்.
இந்திய இராணுவத்தால் அண்மையில் உருவாக்கப்பட்ட அதிசக்தி வாய்ந்த ராம்பேஜ் என்ற ஏவுகணைகள் அந்தநாட்டின் விமானப்படையிலும், கடற்படையிலும் இணைக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அருணாச்சலம் பகுதியில் இந்தப் பதற்றநிலை தீவிரமாகியுள்ள நிலையில் இரண்டு நாடுகளும் அங்கு தீவிர படைக்குவிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறான பின்னணியிலேயே, ராம்பேஜ் என்ற ஏவுகணையை இந்தியா தனது விமானப்படையிலும் கடற்படையிலும் இணைந்துள்ளது. இதை சீனாவுக்கு எதிரான நகர்வு என்று போர்த் தந்திரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ராம்பேஜ் ஏவுகணையானது. 250 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் இலக்கைக்கூட துல்லியமாகத் தாக்கக்கூடிய திறன் கொண்டது. அத்தோடு, இது ஒலியை விடவும் இரண்டு மடங்கு வேகத்தில் பயணித்து இலக்கைத் தாக்கும் எனக் கூறப்படுகிறது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.