இந்தியாவின் கனவு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் வரும் 21ம் திகதி நடைபெறும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 21ம் தேதி காலை 7 மணி முதல் 9 மணிக்குள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. இஸ்ரோ தனது எக்ஸ் தள பக்கத்தில் ககன்யான் திட்டத்தின் இந்த புதிய அறிவிப்பை தெரிவித்துள்ளது.
ககன்யான் திட்டத்தின் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 3 வீரர்கள் விண்வெளிக்கு இந்த ககன்யான் திட்டத்தின் கீழ் அனுப்பப்பட உள்ளனர்.
பெங்களூருவில் உள்ள விண்வெளி வீரர் பயிற்சி நிலையத்தில் இந்த திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட விண்வெளி வீரர்கள் உடல் தகுதி பயிற்சி, சிமுலேட்டர் பயிற்சி மற்றும் ககன்யான் திட்டம் சார்ந்த பயிற்சி பெற்று வருகின்றனர். சமீபத்தில் ககன்யான் திட்ட என்ஜின் சோதனையும் நடைபெற்றது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் ககன்யான் திட்டத்தில் இன்ஜின் சோதனையும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், வரும் 21ம் திகதி ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் நடைபெறும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.